மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள கட்சியின்அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, பூச்செண்டு கதர் ஆடையை அணிவித்து முதல்வர் வரவேற்பு அளித்தார். மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்பி, புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம், மூத்தத் தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்