குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்களுக்குள் காவல்துறையை ஏவி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய மத்திய பாஜக அரசின் அட்டூழியத்தை கண்டித்தும் நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆவேசப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நாட்டின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் பெரும் கிளர்ச்சியில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்திய மாணவர் சங்க தலைவர்கள் வீ.மாரியப்பன், ஏ.டி.கண்ணன், நிருபன் சக்ரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் ஆவேசப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். (மேலும் செய்திகள் - 3, 5)