tamilnadu

img

தொழில் நுட்பத்தைத் துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துக!

தில்லி வன்முறை - மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுதில்லி, மார்ச் 13- தொழில்நுட்பத்தைத் துஷ்பிரயோகம் செய்வதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களில் வன்முறைக்குக் காரண மான கயவர்களின் முகங்களை அடையாளம் காண, அரசாங்கமும், தில்லிக் காவல்துறை யும் முகத்தை அங்கீகரித்திடும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் என்று, நாடாளு மன்றத்தில் இது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

தொழில்நுட்பம் எந்தவிதத்திலும் வன் முறையில் ஈடுபட்டவர்களைத் துல்லியமாகத் தொடர்பு படுத்திடாது. மேலும், சிசிடிவி கேம ராக்களை உடைத்து நொறுக்கியதில் காவல் துறையினருக்கும் பங்கு உண்டு என்பதனை ஏராளமான வீடியோக்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. இதன்மூலம் அவர்கள் வன்முறைக் கும்பல்களுக்கு வெறி யாட்டங்களில் ஈடுபட வசதி செய்து கொடுத்தி ருக்கின்றனர்.  எனவே இவற்றைக்கூட சாட்சி யத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய உண்மை என்னவெனில், தில்லி காவல் துறையும், மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ப்புத் துறை அமைச்சகமும் தில்லி உயர்நீதி மன்றத்தின் முன்பு, இத்தகைய தொழில்நுட்பத் தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 2018இல் 2 சதவீத அளவிற்குத்தான் துல்லியத் தன்மை இருந்தது என்றும், பின்னர் 2019இல் அது 1 சதவீத அளவிற்குத்தான் இருந்ததால் இந்த முறை கைவிடப்பட்டுவிட்டது என்றும் ஒப்புக்கொண்டிருக்கின்றன.  மேலும் இந்த தொழில்நுட்ப சோதனைமூலம் கண்டறியும் நபரை, ஆணா, பெண்ணா என்று கூட கூற முடியவில்லை.

மேலும் இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திட, சட்டரீதியான ஏற்பாடு எதுவும் கிடையாது. நீதித்துறையின் உத்தரவுகளும் எதுவும் கிடையாது. மேலும் இத்தகைய தொழில்நுட்பத்தை வகை தொகையின்றிப் பயன்படுத்துவது தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும் செயலாகும். மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்துவதற்கான சுதந்திரத்தைப் பறிப்பதற்கான செயலுமாகும். இந்தத் தொழில்நுட்பம் வன்முறை வெறி யாட்டங்களில் ஈடுபட்டவர்களின் சாதி, மதம், இனம் முதலியனவற்றைக் கண்டறியும் சக்தி யற்றது என்கிற உள்துறை அமைச்சரின் பரிந்து ரையை அரசியல் தலைமைக்குழு கடுமையாக நிராகரிக்கிறது.  அவர் கூறியுள்ள காரணங்களே நிச்சய மாக இது மிகவும் கொடூரமான ஒன்று என்பதை யும் எனவே இது முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறுகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

                         (ந.நி.)