சென்னை,ஜூலை 26- நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய சமூக சேவகர் அடித்து கொலைசெய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் தணிகாசலம் என்ற சமூக சேவகர். இவர் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள், கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி அவரை அடித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஆம்பூர் தாலுகா போலீசார் 7 பேருக்கு எதி ராக வழக்குப் பதிவு செய்தனர். இந் நிலையில், வெங்கடேசன் என்ற ஒருவருக்கு எதிராக மட்டுமே காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி தணிகாசலத்தின் சகோதரர் சுப்பிரமணி யன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், ஒரு வருக்கெதிராக மட்டுமே காவல்துறை விசாரணையை நடத்தி உள்ளது ஆவணங்களில் தெரிய வந்துள்ளதாகக் கூறி, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்க ளில், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி-க்கு வழங்க வேண்டும் எனவும், டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து முறையாக விசா ரித்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.