திருச்சூர்:
சிபிஎம் கிளை செயலாளர் பி.யூ.சனூப்பைக் கொலைசெய்தவர்கள் அனைவரும் பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் ஊழியர்கள்- போதைமருந்து மாபியாக்கள் என்பது தெரியவந்துள்ளது.கொலைக்குற்றம்சாட்டப்பட்டவர்களில் அபய்ஜித், மரியோன் என்கிற கரிம்பனக்கல் சதீஷ், ஸ்ரீராக் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்-பாஜக பிரமுகர்கள் ஆவர். நந்தனன் பஜ்ரங் தளத் தலைவர். முன்பு இவர்காங்கிரஸ்காரராக இருந்தார். இவர்களின்போதை மருந்து-மாபியா நடவடிக்கை களுக்கு சங் பரிவார் அமைப்பினர் உதவிவந்தனர். நந்தனன் பல கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். வழக்குகள் நிலுவையில் இருந்தபோது அவர் வெளிநாடு சென்றார். சமீபத்தில் ஊர் திரும்பி மீண்டும் சங் பரிவார் செயல்பாடுகளில் ஈடுபட்டார்.அவரது தலைமையில், அப்பகுதிஇளைஞர்கள் போதைக்கு அடிமை யானார்கள். இதைத் தடுக்க முயற்சிப்பவர் களைத் தாக்குவது வழக்கம். பி.யூ.சனூப் கொலையும் அவரது சகாக்கள் மூவர் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளானதும் அதன் தொடர்ச்சியாகும்.