tamilnadu

img

கடந்த நிதியாண்டைவிட ரூ.500 கள்ள நோட்டு புழக்கம் 121 சதவிகிதம் அதிகரிப்பு

கடந்த நிதியாண்டில் இருந்ததை விட 2018 -19 ம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள்  புழக்கம் 121 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம்தேதி நாட்டில் புழக்கத்தில்  500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அப்போது நாட்டில் உள்ள கள்ளப்பணம் கருப்புப்பணத்தை நீக்கவே இந்த நடவடிக்கை என்று மோடி தொடங்கி பாஜக தலைவர்கள் அனைவரும் கூறினர். இதைத்தொடர்ந்து மக்கள் தங்கள் கைகளில் இருந்த பணத்தை வங்கிகளில் செலுத்தி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பெற வங்கி மற்றும் ஏடிஎம் வாசலில் நீண்ட வரிசையில் நின்றனர். அவ்வாறு வரிசையில் நின்று நூற்றக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நோட்டில் சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும் புரளிகளை அள்ளி வீசினர்.  தற்போது நாட்டில் உள்ள பொருளாதார சிக்கலுக்கு பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு முக்கிய காரணம் என்று பொருளாதார அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது 2018-19ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் வங்கிகளில் பணப்புழக்கம் 2017-18ஆம் ஆண்டைவிட 6.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் 500ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளின் பணப்புழக்கம் அதிகரித்ததே ஆகும். 

அத்துடன் இந்த அறிக்கையில் நாட்டிலுள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளும் தரப்பட்டுள்ளது. அதன்படி 2018-19ஆம் நிதியாண்டில் 3,17,384 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 2,21,218 அளவிலான 100ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. அதேபோல புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுகளில் 21,865 கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 2017-18ஆம் ஆண்டு இருந்த அளவைவிட 121 சதவிகிதம் அதிகமாகும். அதாவது 2017-18ஆம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டுகளில் 9892 கள்ள நோட்டுகள் இருந்துள்ளன.

அதேபோல 2000 ரூபாய் நோட்டுகளில் 21,847 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. இது 2017-18ஆம் ஆண்டு இருந்த கள்ள நோட்டுகள் அளவைவிட 21.9 சதவிகிதம் அதிகமாகும். அதாவது 2017-18ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகளில் 17,929 கள்ள நோட்டுகள் இருந்துள்ளன. மேலும் புதிதாக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகளில் 12,728 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.

2017-18ஆம் ஆண்டு புழக்கத்திலிருந்த கள்ள நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை 5,22,783 ஆகும். இந்த எண்ணிக்கையை விட 2018-19ஆம் ஆண்டில் மொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏனென்றால் 2017-18ஆம் ஆண்டு இருந்த கள்ள நோட்டுகளில் அதிகபட்சமாக பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. இந்த நோட்டுகள் 2018-19ஆம் ஆண்டில் புழக்கத்தில் இல்லாததால் மொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

எனினும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி அடைந்திருப்பதை கட்டி உள்ளது.