கும்பகோணம்:
கும்பகோணம் மண்டலத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 14 புதிய பேருந்துகளின் பயன்பாட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக பிரிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியிருப்பதாகவும், ஆய்வு செய்து தேவைக்கு ஏற்ப தனி மாவட்ட கோரிக்கை செயல்படுத்தப்படும். நெல் கொள்முதலுக்கான
குறைந்தபட்ச ஆதார விலை ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.