tamilnadu

img

‘சுயசார்பு திட்ட’ மூன்றாம் கட்ட அறிவிப்புகள் வெளியீடு

புதுதில்லி,மே 15-  பிரதமர் மோடி அறிவித்த ‘சுய சார்பு பாரதம்’திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் தில்லியில் வெள்ளியன்று வெளியிட்டனர். சுயசார்பு திட்டத்தில் 11 அறி விப்புகள் வெளியிடப்படும். இதில் 8 திட்டங்கள் விவசாயத்துறை உட் கட்டமைப்புக்காக இருக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அவர்கள் கூறியது வரு மாறு: 

 விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க கடந்த 2 மாதத்தில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. ஊரடங்கின் போது உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்காக ரூ.74,300 கோடி வழங்கப்பட்டுள்ளது.  ஊரடங்கின் போது விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கிஷான் திட்டத்தில் ரூ. 18,700 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.  பீம் யோஜனா திட்டத்தில் விவ சாயிகளுக்கு ரூ. 64 ஆயிரம் கோடி நிலுவைத்தொகை கொடுக்கப் பட்டுள்ளது.  விவசாய உள்கட்ட மைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.1  லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.  குளிர்பதன கிடங்கள் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளுக்கு நிதி செலவிடப்படும்.ரூ.10 ஆயிரம் கோடி சிறு குறு உணவு தொழிற்சாலை நிறுவனங்களுக்கு வழங்கப்படும். உள்ளூரில் தயாரிப்போம் திட்டத்திற்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளது.   இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.