சட்டப்பேரவை கூட்டத்தொடரை மாநில அரசு கூட்டலாம் என ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு அளித்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் மீதான தடை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆபரணத்தங்கத் தின் விலை சவரன் 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்திய மண்ணை சீனா ஆக்கிர மித்துள்ளது, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
வட கொரியாவில் முதன் முத லாக ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால் எல்லையோர நகரத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
மத்திய ரிசர்வ் காவல் படையின் 82-வது அமைப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளுக்கு உதவிய மதுரை அதிகாரிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக் கறை படியாமல் கரையேறி யவர் அப்துல் கலாம் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிரான சீனாவின் பதிலடியால் செங்டு வில் உள்ள அமெரிக்க துணைத் தூத ரகத்தில் அந்நாட்டுகொடி கீழிறக்கப் பட்டது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு குண மடைந்த நடிகர் விஷால், கொரோனா வுக்கு முக்கியமான மருந்தே பயப் படாமல் இருப்பதுதான் என்று கூறி யுள்ளார்.
தில்லியில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 88% ஆக உயர்ந்துள்ளது என்று முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது மேலும் 275 செயலிகளுக்கு தடை விதிக்க திட்ட மிட்டு உள்ளது.
மராட்டியத்தில் மேலும் 101 காவலர் களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.