tamilnadu

img

ரயில்வே அதிகாரிகளின் எண்ணிக்கை குறைப்பு!

புதுதில்லி:
ரயில்வே வாரியத்தில் 200 அதிகாரிகள் உள்ள நிலையில், அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர்களில், இயக்குநர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட அந்தஸ்திலுள்ள அதிகாரிகள் 50 பேர், ரயில்வே கோட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாவது:ரயில்வே வாரியத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க 2000-ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே திட்டமிடப்பட்டது. அது இப்போதுதான் அமல்படுத்தப்படுகிறது.ரயில்வே வாரியத்தில் எண்ணற்ற அதிகாரிகள் ஒரே மாதிரியான வேலையையே செய்கின்றனர். அதே சமயத்தில் மண்டல ரயில்வேக்களின் செயல்திறனை அதிகரிக்க உயர் அதிகாரிகள் தேவைப்படுகின்றனர். எனவே, ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் தனது முன்னுரிமை பணியாக இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ளார்.ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலின் ‘100 நாள்’ செயல்திட்டத்திலும் இது இடம் பெற்றுள்ளது. 2015-ஆம் ஆண்டு, விவேக் தேப்ராய் கமிட்டி பரிந்துரைகளிலும் இது குறிப்பிடத்தகுந்ததாகும். மேலும், இந்த நடவடிக்கை, ரயில்வே அமைச்சகத்தை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைப்பதில் ஒரு தொடக்கம்தான். இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.

;