இதற்கும் அமெரிக்காவோடுதான் ஒப்பந்தம்
புதுதில்லி, மார்ச் 6 - அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வந்திருந்தார். அப்போது இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத் துறை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாகின. இதில், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் பயன்பாட்டுக்காக வாங்கப்படவுள்ள ‘போயிங் 777’ ரக விமானத்தில், மேம்பட்ட ஏவுகணை பாது காப்பு அமைப்புளை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்த மும் ஒன்று என தற்போது செய்திகள் வெளியாகி யுள்ளன.
இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவ ரின் பயன்பாட்டுக்காக மட்டும் ‘போயிங்’ நிறு வனத்திடம் ‘போயிங் 777’ என்ற 2 விவிஐபி விமானங்களை இந்தியா வாங்கவுள்ளது. இந்த விமானங்களை ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் (Self-protection suites -SPS) கருவிகளை அமைப்பதற்குத்தான் இந்தியா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள் ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 1300 கோடி (190 மில்லியன் டாலர்) ஆகும். ஏர் போர்ஸ் ஓன் (Air Forece One) என்று பெய ரிடப்படவுள்ள, அந்த இரண்டு ‘போயிங் 777’ ரக விவிஐபி விமானங்களும், 2021-ஆம் ஆண்டு மத்தியில் இந்தியாவுக்குக் கிடைக்கும் என கூறப்படுகிறது.