tamilnadu

img

தில்லியில் காவல்துறையினர் வன்முறை: திருமா. கண்டனம்

சென்னை,டிச.17- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில்  போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய தற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா மிலியா இசுலாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்திக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள னர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல் துறையினர் அத்து மீறி  நுழைந்ததும், தாக்குதல் நடத்தியதும், மாணவர்களை கைகளை உயர்த்தி அணிவகுப்பாக நடக்க வைத்ததும், கைது செய்ததும் சட்ட  விரோதமானது. அத்துடன், காவல்துறையினரே இரு சக்கர வாகனங்  களை அடித்து நொறுக்கும் காணொலி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

மாற்றுக்கருத்தே கூடாது என ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்  கும் வகையில், போராடும் மாணவர்கள் உள்ளிட்ட மக்கள்மீது ஒடுக்கு முறையைத் திணிக்கும் பா.ஜ.க.வின் பாசிச அரசுக்கு எதிராக நாடு தழு விய அளவில் தற்போது ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து  போராட வேண்டியது காலத்தின் தேவையாகும். மதவாத பாஜக அரசின்  ஏவுதலின்படி, காவல்துறையினர் தில்லியில் மாணவர்கள் மீது நடத்தி யுள்ள தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வகையில் விசாரணை ஆணையம்  ஒன்றை அமைக்க வேண்டுமெனவும் தொடர்புடைய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.