ஜெருசலேம்:
பாலஸ்தீன நாட்டின் இடதுசாரி தலைவரும் முன்னாள்பாலஸ்தீன சட்டமன்ற உறுப்பினருமான காலிதா ஜெராரைஇஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது.மேற்குக் கரையின் ரமல்லா நகரத்திலிருந்து வியாழனன்று இரவு காலிதாவை கைது செய்தனர். 12 ராணுவவாகனங்களில் வந்த 70க்கும் மேற்பட்ட படை வீரர்கள் அவரது வீட்டை சுற்றி வளைத்ததாக ஜெராரின் மகள் யாராஜெரர் கூறினார். ‘பாப்புலர் பிரண்ட் ஆப் த லிபரேசன் ஆப் பாலஸ்தீன்’ என்கிற அமைப்பில் ஜெரார் செயல்பட்டு வந்தார். ஆனால் இந்த அமைப்பை இஸ்ரேல்தீவிரவாத அமைப்பாக கருதுகிறது.2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் ராணுவத்தால் ஜெரார் கைது செய்யப்பட்டார். 20 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் ஜெரார் விடுவிக்கப்பட்டார். பாலஸ்தீன் சிறையில் உள்ளவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயலாற்றி வரும் ஜெரார் பாலஸ்தீன கைதிகள் உரிமைக்குழுவின் நிர்வாக இயக்குநராக உள்ளார். தற்போது ஏழு பாலஸ்தீன அரசியல் கட்சி தலைவர்கள் இஸ்ரேல் சிறையில் உள்ளனர்.