tamilnadu

img

பழங்குடியினர் மட்டுமே உண்மையான குடிமக்கள்... என்சிபி தலைவர் சரத் பவார் பேச்சு

இந்தூர்:
பழங்குடியினர்தான் நாட்டின் உண்மையான குடிமக்கள் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் (என்சிபி) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.“பழங்குடி மக்களின் அரசியலமைப்பு உரிமைகள்” குறித்த மாநாடு,மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, சரத் பவார் மேலும் கூறியிருப்பதாவது:பழங்குடியினரின் பூர்வீகத்தை அங்கீகரிப்பதற்கான அவர்களின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். பழங்குடியினர் இந்தியாவின் அசல் பூர்வீகம். இதற்கு ஐக்கியநாடுகள் அவையின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் தேவை. அதற்கான முயற்சியை செய்ய வேண்டியது எங்களது கடமை.பழங்குடியினர்தான் ‘உண்மையான எஜமானர்கள்’. நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் பலமும் அவர்களுக்கு உள்ளது.இவ்வாறு சரத்பவார் கூறியுள்ளார்.

;