tamilnadu

img

நீதிபதிகள் ஈட்டும் நற்பெயரின் மூலம்தான் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்... உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா பேச்சு

புதுதில்லி:
மக்கள் நம்பிக்கைதான் நீதித்துறையின் பலம் .அந்த நம்பிக்கை நீதிபதிகள் ஈட்டும் நற்பெயரின் மூலம்தான்  வரும். நீபதிகள் தங்கள் முடிவுகளில் அச்சமின்றி இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி என். வி. ரமணா கூறினார்.

உச்சநீதிமன்ற நீதிபதி என். வி. ரமணா மீது குற்றம்சாட்டி ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன்பின்னர் நீதிபதி ரமணா சனிக்கிழமையன்று  ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:நீதித்துறையின் மிகப்பெரிய பலம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான். நம்பிக்கை மற்றும் ஏற்றுக்கொள்ளல் யாரும் கட்டளையிட்டு வருவதில்லை. அது நீதிபதிகள் ஈட்டும் நற்பெயரில் உள்ளது.
எனவே, நீதிபதிகள் தங்கள் கொள்கைகளை கடைப்பிடிப்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும். அனைத்து அழுத்தங்களையும் முரண்பாடுகளையும் தாங்கிக்கொண்டு அவர்களின் முடிவுகளில் அச்சமின்றி இருக்க வேண்டும்.ஒரு நபர் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு பணிவு, பொறுமை, இரக்கம், ஒரு வலுவான பணி நெறிமுறை மற்றும் தன்னைதொடர்ந்து கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் உற்சாகம் உள்ளிட்ட எண்ணற்ற குணங்கள் உள்ளன.  நாம் அனைவரும் மறைந்த நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் வார்த்தைகளிலிருந்து உத்வேகம் பெறவேண்டும். நீதிபதி லட்சுமணன், நாடு கண்ட சிறந்த நீதிபதிகளில் ஒருவராக இருப்பதற்குத் தேவையான அனைத்து குணங்களையும் பெற்றிருந்தார் என்று நான் நம்புகிறேன். இறுதியில் நம் மதிப்பார்ந்த விழுமியங்களே நமது மிகப்பெரிய செல்வம், அதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நீதிபதி லட்சுமணன் மக்களின் நன்மதிப்பை பெற்றவர். ஒரு நல்ல மனிதராகவும் மற்றும் நல்ல நீதிபதிஎப்படி இருக்கவேண்டும் என்பதை அவரிட மிருந்து நான் பெரிதும் கற்றுக்கொண்டேன்.உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்தில், நீதிபதி லட்சுமணன் பல அரசியலமைப்பு அமர்வுகளின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் வரிவிதிப்பு, மத நிறுவனங்களின் மேலாண்மை, அரசு ஊழியர் பிரச்சனைகள், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பணியாளர் நலன் உள்ளிட்ட பரந்த அளவிலான பிரச்சனைகளைத் தொட்டு 200 க்கும் மேற்பட்ட தீர்ப்புகளில் பங்களித்தார். இவ்வாறு  நீதிபதி என்.வி.ரமணா பேசினார்.