tamilnadu

img

அக்.2-க்குள் பிளாஸ்டிக்  பைகளின்  உற்பத்தியை நிறுத்த உத்தரவு

புதுதில்லி:
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பைகளின் உற்பத்தியை நிறுத்த அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில்,  ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் உற்பத்தியை நிறுத்த வேண்டும். அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்கள், பொதுத்துறை தனியார் நிறுவனங்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.  செயற்கையான பூக்கள், பேனர்கள், கொடிகள், பூந்தொட்டிகள் , பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் எழுதுபொருட்கள் , பிளாஸ்டிக் கோப்பைகள், ஸ்பூன்கள், பழரசம் அருந்தும் ஸ்ட்ரா, அலங்காரப் பொருட்கள் உள்பட எந்த வகையான பிளாஸ்டிக் பயன்பாடும் இருக்கக்கூடாது என்றும் அதற்கு மாற்று முறைகளை நாடுமாறும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

;