புதுதில்லி, நவ. 4-
நவம்பர் 5 அன்று நடைபெறவுள்ள விவசாயிகள் மறியல் போராட்டத்திற்கு, மத்தியத் தொழிற்சங்கங்கள் ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவித்துள்ளன-
மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து அனைத்து விவசாய சங்கங்களும் மேற்கொண்டுள்ள நவம்பர் 5 மறியல் போராட்டத்திற்கு தன் முழுமையான ஆதரவை நல்குவதாக அது தெரிவித்துள்ளது.
இதேபோன்று வரும் நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கின்ற வேலைநிறுத்தத்தின்போது விவசாயிகளின் கோரிக்கையையும் இணைத்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. இப்போராட்டத்திற்கு தொழிலாளர் வர்க்கம் முழுமையாக ஆதரவு அளித்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறது.
(ந.நி.)