tamilnadu

img

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் மீண்டும் முறையீடு

புதுதில்லி,ஜன.24-  தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா என்பவரை  பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற  வழக்கில் பவன் குப்தா, முகேஷ் குமார் சிங், வினய் சர்மா, அக்சய் தாகுர் ஆகிய 4 பேருக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி யன்று தூக்கு தண்டனை நிறை வேற்றப்படவுள்ளது. முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை தொடர்ந்து மரண தண்டனையை நிறைவேற்ற தில்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அரோரோ உத்தரவிட்டார்.

இந்நிலையில் குற்றவாளிகள் சார்பாக தில்லி பாட்டியாலா நீதி மன்றத்தில் மீண்டும் முறையீடு செய்யப் பட்டுள்ளது.  குற்றவாளிகளான வினய், பவன்,  அக்சய் சார்பாக வழக்கறிஞர் ஏ.பி.சிங் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சீராய்வு, கருணை மனுக்களுக்கு தேவையான ஆவணங்களை திகார் சிறை நிர்வாகம் தங்களுக்கு வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று நடைபெறுகிறது.

;