புதுதில்லி, ஜூலை 25-
வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய சுமார் 2 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனக்குத் தப்பியோடிய நிரவ் மோடி, மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வருகிறார்.
அவருக்கு இன்று (வியாழக்கிழமை) ஆகஸ்ட் 22 வரைக்கும் மேலும் நீதித்துறை காவல் நீடிப்பு செய்யப்பட்டது.
நிரவ் மோடி, சவுத்-வெஸ்ட் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த மாதத்தின் முற்பகுதியில் அவர் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு, லண்டன் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
(ந.நி.)