tamilnadu

img

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு புதிய தலைவர்

புதுதில்லி:
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அருண்குமார் சின்கா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. இந்த நான்கு மாநிலங்களும் இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்துள்ளன.இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த மசூத் ஹூசைன் பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிந்தது. இதனைத்தொடர்ந்து அருண்குமார் சின்கா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

;