tamilnadu

img

நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது.. தேசிய தேர்வு ஆணையம்

கொரோனா பரவலால் உலகம் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், ஒவ்வொரு நாடும்,அதில் உள்ள  மாணவர்களின் கல்வி மிகவும் பாதித்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.இது இந்தியா மாணவர்களையும் அதிகம் பாதிக்கிறது என்று சொல்லப்பட்டாலும் ,இதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் கொரோனா காலத்தில் புதிய கல்வி கொள்கை போன்ற பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு, மற்றும் அதை அதிகம் எதிர்த்து பேசாத மாநில அரசும் தான்.

இந்திய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர நடத்தப்படும் நீட் தேர்வின் தேதி ,இந்த கொரோனா காலகட்டத்தில் வெளியானது மாணவர்களுக்கு பெரும் அச்சத்தை விதைத்துள்ளது.இதை எதிர்த்து கேரளா மாநிலத்தில் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் அஜீஸ், வளைகுடா நாட்டில் உள்ள இந்திய மாணவர்களை திரும்பி அழைத்து வர எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ,நீட் தேர்வை நடத்துவது மிகவும் ஆபத்தானது  என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 

அதற்கு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தக்கூடாதா..? என்று கேள்வி எழுப்பியது.அதற்கு தேசிய தேர்வு ஆணையம் இதில் பல முரண்பாடுகள் மற்றும் சிக்கல்கள் உள்ளது எனவும் ,இதற்காக பல புதிய  தேர்வு மையங்களை ஆரம்பிக்க முடியாது எனவும் தெரிவித்தது.

குறித்த தேதியில் நிச்சயமாகத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தது.இதை பார்க்கும் போது மாணவர்களை பற்றி கவலைப் படாமல் தான் நினைத்தை மட்டும் நடத்துவேன் என்று சொல்லும் தேசிய தேர்வு ஆணையத்தின்  அதிகாரம் வெளிப்படுகிறது.