இந்தியா தான் உலகிலேயே பெண்களுக்கு மிக வும் ஆபத்தான நாடு என்று தனது ஆய்வில் கூறுகிறது தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம். ஆளும் வர்க்கத்தின் அடிப்படைக் குணமான ஆணாதிக்கம் இந்த சமூகத்தை ஆளுகிறது. அதன் காரணமாக எல்லா விதமான வர்க்கப் பின்னணியும் உடைய எல்லா சமூகக் குழுக்கள் இடையிலும் பெண்க ளுக்கு எதிரான வன்முறை மற்றும் அவர்களை இரண் டாம் தரமானவர்களாக நடத்தும் புறக்கணிப்பு நிகழ்கிறது.
அதிக வருமானம் உடைய, நன்கு படித்தவர்கள் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் குடும்ப வன் முறைக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான பெண்கள் எல்லா மட்டத்திலும் பாரபட்சத்தை சந்திக்கும் நிலை உள்ளது. மக்களாட்சியைப் பின்பற்றும் நாடாக உள்ள போதிலும், இந்தியப் பெண்களில் ஒரு பகுதியினார் முன்னேற்றம் அடைந்து வரும் சூழலிலும் ஆணா திக்கம் தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது. வரதட்சணைக்காக கணவன், மனைவியை அடிப்பது கூட இந்த சமூகத்தில் இன்னும் முழுமை யாக விலக்கி வைக்கப்பட்டதாகவில்லை. ஜனநாய கத்தின் அனைத்து அமைப்புகளும் பெண்கள் உரிமை மற்றும் சமத்துவத்தை இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. பெண்களுக்கு அவர்களது வீடே மிகவும் அபாயகர மானதாக இருப்பதாக அதிர்ச்சிகரமான விபரங்க ளைச் சொல்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. 3 பேரில் ஒரு பெண் தன் உடன் வசிக்கும் இணையால் உடல் அல்லது மனரீதியிலான வன் முறைக்கு ஆளாவதாக 2017ஆம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது. மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2015ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலும் கூட 95.5 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தெரிந்த நபர்களாலேயே ஏற்படுவதாக சொல்லப் பட்டுள்ளது.
திருமண உறவுகளில் நடக்கும் பாலியல் கொடுமை களை, வன்கொடுமைகளாக கருத முடியாது என நீதிமன்றம் சொல்கிறது. எனில் நம்முடைய ‘கலாச்சாரம்’ எத்தகையது என்பதை என்பதை புரிந்து கொள்ளலாம். 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட இது குறித்த ஒரு கேள்விக்கு சனாதன இந்துத்துவத்தை கொள்கையாகக் கொண்டிருக்கும் மோடி அரசு “இந்திய சமூகத்தில் திருமணங்கள் புனிதமானவை” எனக் கருது வதால் அதில் நிகழும் வல்லுறவுகளை ‘வல்லுறவுக ளாகக்’ கருதி சட்டத்தால் தண்டிக்க முடியாது எனச் சொல்லிவிட்டது.
குடிமக்களின் தனிப்பட்ட உரிமைகளை, சமத்து வத்தை பேணிக்காக்க வேண்டிய அரசு இத்தகைய பிற்போக்குத் தனத்துடன் நடந்து கொள்ளும்போது அதற்கு கடுமையான எதிர்ப்புக்குரல் எழுப்புவதும், எழும்புவதும் தவிர்க்க முடியாதது. பெண்கள் கருவிலிருந்து கல்லறை வரை நசுக்கப்படுகிறார்கள். பெண்கள் மீது ஏதாவது ஒரு வடிவத்தில் வன்முறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலமான உத்தர்கண்ட்டில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் 132 கிராமங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்க வில்லை. கருவிலேயே பெண் படுகொலை மோசமான நிலையை எட்டியுள்ளதன் பயங்கர உதாரணம் இது. நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் பெண் குழந்தை களின் பிறப்பு விகிதம் 0.75 சதவீதம் மட்டுமே அதி கரித்துள்ளது. தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 995 பெண் குழந் தைகள். கேரளம், புதுச்சேரியில் மட்டும்தான் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 1000க்கு மேல். நீலகிரியில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 1041 பெண் குழந்தைகள் என பிறப்பு விகிதம் உயர்ந்து காணப்படு கிறது. தருமபுரியில் 946, தலைநகர் சென்னையில் 986 என பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறை வாக உள்ளது. குஜராத் மாநிலத்தில் பெண் குழந்தைக ளின் பிறப்பு விகிதம் 918ஆக மட்டுமே உள்ளது.
ஒவ்வோராண்டும் பிறந்து சில மாதங்களிலேயே பத்து லட்சம் பெண் குழந்தைகள் இறக்கின்றன. நாட்டில் ஆறு பெண் குழந்தைகளில் ஒருவர் தன்னுடைய பதி னைந்தாம் பிறந்த நாளை பார்க்கும் முன்பே இறந்து விடுகின்றனர். நான்கு வயதுக்கு உட்பட்ட பெண் குழந் தைகளின் இறப்பு, ஆண் குழந்தைகள் இறப்பை விட அதிகமாக உள்ளது. சுகாதார பிரச்சனைகளால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். உரிய மருத்துவ சேவை கிடைக்காத காரணத்தாலேயே பெண் குழந்தை களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. நாட்டில் எழுத்தறிவு பெற்ற பெண்களின் விகிதம் 65 சதவீதம் மட்டுமே. 5 முதல் 9 வயதுள்ள 53 சதவீதம் பெண் குழந்தைகள் கல்வி கிடைக்காதவர்களாக உள்ளனர். தமிழகத்தில் 73.9 சதவீதம் பெண்களே எழுத்தறிவு பெற்றவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் பெண் குழந்தைகள் 1.2 கோடி பேர் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் கடந்த 2016ல் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி கடத்தப்பட்டுள்ள பெண் கள், குழந்தைகளின் எண்ணிக்கை 20,000. கிராம பகுதிகளில் குழந்தை கடத்தல் அதிக அளவில் நடை பெறுகிறது. குழந்தை கடத்தல் நடைபெறும் மாநிலங்க ளில் தென்னிந்தியாவில் கர்நாடகம், ஆந்திரத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. கடத்திச் செல்லப் படும் பெண் குழந்தைகளில் 22 சதவீதம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பலர் வீட்டு வேலைகளிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சிலருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ஆணாதிக்கச் சமூகத்தின் கோர விளைவாக நடக்கும் பாலினப் பாகுபாட்டால் பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் முடிவுக்கு வரவேண்டும். அத்தகைய முடிவின் தொடக்கமாக மாதர் சங்கம் நடை போடுகிறது, நவம்பர் 25 முதல் மாபெரும் நடை பயணமாய்....!