tamilnadu

img

மாற்றுப் பாலினத்தவர்க்கு  தேசியக்கவுன்சில்!

மாற்றுப் பாலினத்தவர்களுக்கான தேசியக் கவுன்சிலை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மாற்றுப் பாலினத்தவர் (உரிமைகளைப் பாதுகாத்தல்) சட்டம் 2019, பிரிவு 16-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி மத்திய அரசு 2020 ஆகஸ்ட் 21 அன்று இந்த தேசியக் கவுன்சிலுக்கான (NCD)அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் கவுன்சிலின் தலைவராக (அலுவல் சாராது) இருப்பார். பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் பிரதிநிதிகள், மாற்று பாலினச் சமூதாயத்தினரின் 5 பிரதிநிதிகள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. துறை இயக்குநர் பாவ்னா படேல் தெரிவித்துள்ளார்.

;