போபால்:
மத்தியப்பிரதேச மாநில இடைத்தேர்தலில் தனது நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து பறிக்கப்பட்டதை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தின் மீது உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் கமல்நாத் வழக்கு தொடர்ந்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. கமல்நாத் தலைமையிலான மத்திய பிரதேச காங்கிரஸ்ஆட்சி, 15 மாதங்களுக்கு பிறகு கடந்தமார்ச் மாதம் பாஜகவினரால் கவிழ்க்கப் பட்டது. காங்கிரசை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, பாஜகவுக்கு 22 எம்எல்ஏ.க்களுடன் கட்சித் தாவினார். இந்த எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இது தவிர, ஏற்கனவே 6 தொகுதிகள் காலியாக இருந்தன. இந்த 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது.
அதனால், கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக பெண் அமைச்சரை கமல்நாத் தரக்குறைவாக பேசியதாகக்கூறி அவருடைய நட்சத்திர பேச்சாளர்அந்தஸ்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக பறித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கமல்நாத் சனிக்கிழமையன்று வழக்கு தொடர்ந்தார். இதை அவசர மனுவாகவிசாரிக்கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.