tamilnadu

img

மோடி, அம்பானி, அதானி பொம்மைகளை எரித்து தசரா கொண்டாட்டம்... இந்தியாவின் உண்மையான ராவணன்கள் இவர்கள்தான் என்று பஞ்சாப் விவசாயிகள் முழக்கம்..

அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலத்தில் ராவணனுக்குப் பதில், மோடி, அம்பானி, அதானி உருவபொம்மைகள் எரித்து,தசரா கொண்டாடப்பட்ட சம்பவங் கள் அரங்கேறியுள்ளன.

தசரா பண்டிகையின் நிறைவாக, ராவணனின் உருவபொம்மையை எரிப்பது வட இந்தியாவில் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.அதாவது, ராவணன் என்பவனை தீமையின் அம்சமாக கருதி, பல அடி உயரத்திற்கு அந்த ராவணன் உருவபொம்மையை நிறுவி,அதனை ஸ்ரீராமன் அம்பு ஏவி எரிப்பதாக இந்த நிகழ்ச்சி இருக்கும்.ஆனால், இந்த முறை, ராவணனுக்குப் பதில், பிரதமர் மோடி, இந்தியாவின் பெருமுதலாளிகளான அம்பானி, அதானி ஆகியோரின் உருவபொம்மைகளை எரிப்பதை, பஞ்சாப்
விவசாயிகள் தசரா நிகழ்வாக்கியுள் ளனர்.

விவசாயம் மற்றும் விவசாயிகளை அழிக்கும் வகையில், 3 புதியவேளாண் சட்டங்களைக் கொண்டுவந்த பிரதமர் மோடிதான் தங்களுக்குராவணன் என்று கூறி, இந்த நிகழ்ச்சிகளை அவர்கள் நடத்தியுள்ளனர்.1. `விலை உத்தரவாதம் மற்றும் பண்ணைச் சேவைகள் சட்டம்’ (TheFarmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act-2020). 2. விவசாயிகள், விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் (Farming Produce Tradeand Commerce (Promotion andFacilitation) Act - 2020), 3. ‘அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020’ (Essential Commodities (Amendment) Act2020) ஆகிய 3 சட்டங்களை மத்தியபாஜக அரசு அண்மையில் நாட்டில் சட்டமாக்கியது. 

இவற்றில் “விலை உறுதி மற்றும்பண்ணைச் சேவைகள் சட்டம், விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு கொத்தடிமையாக மாற்ற முயற்சிக்கிறது; ‘வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டமானது, இதுவரை வேளாண் விளைபொருட்களுக்கு கிடைத்த அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (Minimum SupportPrice-MSP) இல்லாமல் செய்கிறது; அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், உணவுதானியங்கள் உள்ளிட்ட உணவுப்பொருள்களைப் பதுக்கி வைப்பதற்கான கள்ளச் சந்தையை ஊக்குவிக்கிறது என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். தொடர் போராட்டங்களையும் நடத்தினர். இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் வந்தபோது எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. பாஜக கூட்டணி கட்சியானசிரோமணி அகாலிதளம் அமைச்சரவையிலிருந்தும், கூட்டணியிலிருந் தும் வெளியேறி எதிர்ப்பைக் காட்டியது.

ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு, மோடி அரசு தனது எஜமானர்களான முதலாளிகளைத் திருப்திப்படுத்துவதற்காக 3 மசோதாக்களையும் விவாதத்திற்கே விடாமல் சட்டம் ஆக்கியது.இந்த பின்னணியிலேயே, தங்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கவந்த தீமையின் அச்சாக கருதி, இராவணனுக்குப் பதில், பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து, பஞ்சாப் விவசாயிகள் தசரா கொண்டாடியுள்ளனர்.மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் முதலாளிகள்தான் பயனடைய உள்ளனர் என்பதைக் குறிக்கும் வகையில், அம்பானி, அதானி உருவபொம்மைகளையும் மோடி பொம் மையுடன் சேர்த்து எரித்துள்ளனர்.