tamilnadu

img

புயல் பாதிப்புகளை குறைக்க விரைவில் நவீன எச்சரிக்கை கருவி... இந்திய வானிலை மையம் தகவல்

புதுதில்லி:
இந்தியாவில் புயல் பாதிப்புகளை குறைக்கும் வகையில் சக்திவாய்ந்த புயல் எச்சரிக்கை கருவிவிரைவில் செயல்படுத்தப்படவுள்ளது  என்று இந்தியவானிலை மைய இயக்குநர் மிருத்யுன்ஜெய் மகாபத்ரா கூறினார். உலக விண்வெளி வார கொண்டாட்டத்தை முன்னிட்டு, ‘புயல்களை துரத்துதல்’ என்ற தலைப்பில் தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் மகாபத்ரா பேசியதாவது: 

உலகம் முழுவதும் புயல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் புயல் பாதிப்புகளை குறைக்க சக்திவாய்ந்த புயல் எச்சரிக்கை கருவி, விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய புயல் எச்சரிக்கை கருவி, மாவட்ட வாரியாக துல்லியமான தகவல்களை தெரிவிக்கும்.  இவைகள் பேரிடர் நிர்வாக அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.