tamilnadu

img

7 இந்தியர்களில் ஒருவருக்கு மனநல பாதிப்பு

மருத்துவ ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

புதுதில்லி, டிச.25- இந்தியாவில் 7 பேர்களில் ஒருவர் மனநல பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக வும், இந்த வகையில், இந்திய மக்க ளில் 19 கோடியே 70 லட்சம் பேருக்கு மன நல பாதிப்புகள் இருப்பதாகவும் ஆய் வில் தெரியவந்துள்ளது. இந்திய மக்களின் மனநிலை தொடர் பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் நாடு முழுவதும் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. அதில்தான், இந்திய மக்களின் மனநிலை பாதிப்பு மிகவும் அதிகரித்து வருவதாக தெரியவந் துள்ளது. அதாவது மனநிலை பாதிப்பு என் பதை மன அழுத்தம், பதற்றத்தால் ஏற் படும் படபடப்பு, மனச்சிதைவு, இருவித மான எண்ணங்கள், அறிவுத்திறன் பாதிப்பு, மனநிலை வேறுபாடு, ஆட்டி சம் என்று பல்வேறு வகையாக பிரித்துள் ளனர். அந்த வகையில் இந்தியாவில் 7 பேர்களில் ஒருவர், ஏதாவது ஒரு மன நிலை பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. நாட்டில் 4 கோடியே 57 லட்சம் பேர் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கி றார்கள். 4 கோடியே 49 லட்சம் பேர் பதற் றத்தால் ஏற்படும் படபடப்பு நோய்க்கு ஆளாகி உள்ளனர். மொத்தத்தில் இந் திய மக்களில் 19 கோடியே 70 லட்சம் பேருக்கு பாதிப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பிட வேண்டிய அம்சம் என்ன வென்றால், 1990-ஆம் ஆண்டை ஒப்பி டும்போது இது 2 மடங்கு அதிகரித்துள் ளது.  பொதுவாக வயதான காலத்தில் இது போன்ற பாதிப்புகள் அதிகமாக இருக் கும். ஆனால், இந்தியாவில் வயதாவ தற்கு முன்னதாகவே பலருக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது, தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 

;