புதுதில்லி, ஜூலை 13- நாட்டின் பல பகுதிகளிலும் ஜெய் ஸ்ரீராம் சொல்லவில்லை என்று கூறி குண்டர் கும்பல்களால் கொலை செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன. இவற்றை ஒடுக்கிட மத்திய அரசு சட்டம் இயற்றுவதற்குத் திட்ட மிட்டிருக்கிறதா என்று பகுஜன் சமாஜ் கட்சி மக்களவை உறுப்பினர் குன்வார் டானிஷ் அலி பிரச்ச னையை எழுப்பினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை களை எழுப்பும் பூஜ்ய நேரத்தில் குன் வார் டானிஷ் அலி பேசியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்சா வான் மாவட்டத்தில் ஜூன் 18 அன்று தவ்ரேஷ் அன்சாரி என்னும் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொடூர மான முறையில் குண்டர் கும்பலால் ஜெய் ஸ்ரீராம் சொல்லச்சொல்லி தாக்கப்பட்டுள்ளார். மிகவும் கடுமை யான தாக்குதலுக்கு ஆளான அன்சாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப் பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி நான்கு நாட்கள் கழித்து இறந்து போனார். இதேபோன்று பீகார் மாநிலத்தில் வைசாலியில் ஒருவர் குண்டர் கும்பலால் இதேபோன்று கொல்லப்பட்டுள்ளார். இத்தகைய குண்டர் கும்பல்க ளின் வன்முறை வெறியாட்டங்க ளை ஒடுக்கும் விதத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டுவர திட்ட மிட்டிருக்கிறதா என்று குன்வார் டானிஸ் அலி கேள்வி எழுப்பினார். (ந.நி.)