tamilnadu

img

கீழடியில் அருங்காட்சியகம்

சென்னை, ஜூலை 18- தமிழக சட்டப்பேரவை யில் செய்தி விளம்பரம், தமிழ் வளர்ச்சி, பண்பாடு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் தாயகம் கவி, கீழடி அகழா ய்வின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பி னார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் க.பாண்டிய ராஜன், கீழடியில் ஓராண்டிற் குள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் 110 ஏக்கரில் புதிதாக நவீன தொழில்நுட்ப முறையில் அகழாய்வு நடைபெறுகிறது என்றும் அதில் அரிய பொருட்கள் கிடைத்துள்ளது என்றும் கூறினார்.

;