புதுதில்லி, ஆக.29- ஊடக நிறுவனங்கள் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை மீறி ஊழியர்களின் வேலைகளை பறித்திருப்பதை எதிர்த்து பத்திரிகையாளர் சங்கங்கள் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக் களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டி ருக்கிறது. சமூக முடக்கக்காலத்தில் எந்தவொரு தொழிற்சாலையும் தன் ஊழியர்களுக்கு சம்பளக்குறைப்போ ஆட்குறைப்போ செய்யக்கூடாது என்று மத்திய அரசின் உள்துறை அமைச்ச கம் மார்ச 29 அன்று அறிவிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் ஊடக நிறுவனங்கள் இதனை மதித்திடாமல் பலரை வேலை யிலிருந்து நீக்கி இருக்கின்றன, பலருடைய ஊதியங்களை வெட்டிக் குறைத்திருக்கின்றன. இதற்கு எதிராக தேசிய இதழியலாளர்கள் கூட்டணி (NAJ – National Alliance of Journalists), தில்லி பத்திரிகையாளர் சங்கம் (DUJ-Delhi Union of Journalists) மற்றும் பெருநகர மும்பை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை உச்சநீதி மன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தன. இவற்றை உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமனா, சஞ்சய் கிஷன் காவுல் மற்றும் பி.ஆர். கவாய் ஆகியோரடங்கிய அமர் வாயம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது. (ந.நி.)