புதுதில்லி:
தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு நாடு முழுவதும் ஞாயிறன்று நடைபெற்றது.
ஜே.இ.இ. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மைதேர்வு கடந்த ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடந்து முடிந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்து 4 ஆயிரம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.முதன்மை தேர்வுகளில் வெற்றி பெறும்தேர்வர்கள் அடுத்த கட்டமாக ஜே.இ.இ.அட்வான்ஸ்டு தேர்வை எழுத தகுதியுடை யவர்கள் ஆவர். அதன்படி ஞாயிறன்று ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நாடு முழுவதும் 222 நகரங்களில் ஆயிரம் மையங்களில்நடைபெற்றது. இந்த தேர்வை 1.60 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர்.