tamilnadu

img

மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைக்கு தேசவிரோத வழக்கா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

சென்னை, அக்.5- மக்கள் நலன் சார்ந்த நடவ டிக்கைக்கு தேசவிரோத வழக்குப் போடுவதா என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் ஆட்சிப்பொறுப் பேற்ற பிறகு  நாடு முழுவதும் குறிப் பாக வடமாநிலங்களில் மாட்டுக்கறி, ஜெய்ஸ்ரீராம் ஆகியவற்றை முன் வைத்து கும்பல் வன்முறைகளும், கொலைகளும் பெருகியுள்ளதை அரசு ஆவணங்களே வெளிப்படுத்தி வருகின்றன. தற்போது 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு, இந்த வன் முறைகள் இரட்டிப்பாகியிருப்பதாக ஆம்னஸ்ட்டி இண்டர்நேஷனல் அமைப்பும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அரசும், அரசு அமைப்பு களும் வன்முறையாளர்கள் மீதும், கொலைக்குற்றவாளிகள் மீதும் சட்டப் படியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு பதிலாக, குற்றவாளி களுக்கு ஆதரவாகவும், அவர்களை கொண்டாடும் நிலையிலும் நடந்து கொள்வது மனச்சாட்சியுள்ள இந்தியர்கள் அனைவரையும் பதற வைத்துள்ளது. 

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட திரைத்துறையிலும், எழுத்துத்துறையிலும் உள்ள 49 பேர் இவற்றை தடுத்து நிறுத்தக்கோரி பிரதமருக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இது அனைவராலும் பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். இந்தக்கடிதம் தேசவிரோதமானது என வடமாநி லத்திலுள்ள ஒரு நீதிமன்றம் அறி வித்து வழக்கு பதிவு செய்ய உத்தர விட்டதையொட்டி இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கி றது.  வன்முறைகளையும், கொலை களையும், சட்டவிரோத செயல் களையும் தடுத்து நிறுத்த வேண்டிய அரசும், அரசு அமைப்புகளும் மவுன மான நிலையில் இருக்கும்போது தேசபக்தியும், மனித நேயமும், அரசி யல் சட்டத்தின் மீது அக்கறையும், ஜனநாயகத்தின் மீது மதிப்பும் கொண்டவர்கள் இச்செயல்களை விமர்சிப்பதும், கண்டிப்பதும், நட வடிக்கை எடுக்க பிரதமருக்கு கடி தம் எழுதுவதும் தேச பக்த செயலே. இவற்றை கொண்டாடுவதற்கும், தவறிழைத்தவர்கள் மீது நடவ டிக்கை எடுப்பதற்கும் பதிலாக கடி தம் எழுதியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது ஜன நாயகத்தின் மீதான கொடூரத் தாக்கு தலாகும். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு அரசு மற்றும் அரசு அமைப்புகள், நீதிமன்றம் ஆகியவற்றின் இந்த செயலை வன் மையாக கண்டிக்கிறது. மேற்கூறிய கடிதமெழுதிய மனிதாபிமானிகள் மீதான வழக்குகளை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்து கிறது. அந்தக் கடிதத்தை எழுதிய வர்களோடு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனது ஒருமைப்பாட்டை யும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜனநாயக உள்ளம் படைத்த அனைத்துப்பகுதியினரும் வன்முறைக்கு எதிராக கடிதம் எழுதியவர்களுக்கு தங்கள் ஆத ரவை தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.