tamilnadu

img

மக்கள் பணத்தால் சொந்த மக்களுக்கே ‘சூடுபோட்ட’ முன்னாள் அமைச்சர்

கிருஷ்ணகிரி, நவ.15- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டி னம் டாக்டர் அம்பேத்கர் நகரில் தென் பெண்ணை ஆற்று கிழக்குக் கரையில் 2012-13 திட்டத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில்  கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்  பட்டது. ஆற்றங்கரையோரம் ஊரை ஒட்டி நீண்ட பிரதான கால்வாய் கட்டப்பட்டு நகரின்  ஒட்டு மொத்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலை யத்தை சென்றடைந்து சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் என அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் கேபி.முனுசாமி கூறினார். கடும் துற்நாற்றத்துடன், ஆற்று நீரும் மாசு ஏற்படும்,வியாதிகள் வரும் இப்பகுதி மக்களின் ஆழ்துளை கிணறுகளிலும் நீர்  கெட்டுப் போகும் என்பதால் ஊருக்குள் வேண்டாம் ஊருக்கு வெளியில் தொலைவில்  இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என  காங்கிரஸ் தலைவர்  தமிழரசு, பெரியார்  இயக்க நிர்வாகி குமார், தமிழ்நாடு விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் கேசி.ராமசாமி, திராவிடர் கழக வட்டச் செயலாளர் திராவிடமணி,மார்க்சிஸ்ட் கட்சி  மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன்,  ஒன்றியச் செயலாளர் ராஜா உட்பட பொது மக்களும் அரசு வட்ட, மாவட்ட அலுவலர்களி டம் பல புகார் மனுக்களும்  கொடுத்துள்ளனர். இந்த திட்டம் குறித்து மாசு கட்டுப்பாட்டு  வாரியத்திடமும், அப்பகுதி மக்களிடமும் கருத்தும் அனுமதியும் கேட்காமல் கே.பி. முனுசாமியின் கட்டுப்பாட்டில் திட்டம் நடந்தேறியதாகக் கூறுகிறார்கள். கட்டி முடிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் செயல் படாத திட்டமாக கிடப்பில் போடப்பட்டது. இத னால் நகரின் மொத்த கழிவு நீரும் கலக்கும்  பிரதான கால்வாய் முழுவதும் கழிவு நீர், குப்பை கூலம் தேங்கி 7 ஆண்டுகளாக ஊர்  முழுவதும் கடும் துர்நாற்றம் மாசு, வியாதிகள்  ஏற்பட்டு வருகிறது. பிரதான கால்வாயில் பல இடங்களில் இடிந்து கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலந்து வருகிறது. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரி யத்திடம்  புகார்கள் தொடர்ந்து கொடுக்கப்  பட்டும், அந்த வாரியமும் மாசடைந்தது போல  செயல் இழந்து இருக்கிறது. ஏற்கனவே பெங்களூரு கழிவு நீரே கெலவரப்பள்ளி அணை மூலம் தென்பெண்ணை ஆற்றின்  வழியே கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு வந்து  மீண்டும் தென்பெண்ணை ஆற்றில்  வருகிறது. 

இந்நிலையில், சொந்த காசில் மீண்டும்  சூடு வைத்துக் கொண்டதாற்கு சாட்சியாக 2012 ல் ரூ. 50 லட்சம் மக்கள் வரிப் பணத்தை  ஒதுக்கி விறையம் செய்தனர். கழிவு நீரும்,  திட்டமும் முடங்கி,கடும் மாசடைந்த கழிவு நீர்  நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்று  நீரை மக்களும் ஆடு மாடுகளும் குளிக்க துவைக்க தொடர்ந்து பயன்படுத்தி வருவ தால் தோல் வியாதிகள், சுவாசக்கோளாறு கள், ஒவ்வாமை, குடல் பிரச்சனைகளால் மக்  கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்பகுதி வீடுகளில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி யின் சொந்த ஊரான காவேரிப்பட்டின மக்கள்  தொடர்ந்து கேட்டும் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் கொண்டுவராமல், செயல்படாத கழிவு  நீர் சுத்திகரிப்பு திட்டம் கொண்டு வந்து 50  லட்சமும் நீராதாரமும், மக்கள் சுகாதாரமும் சூறையாடப்பட்டதே மிச்சம், என்றும் பொது மக்கள் கூறுகிறார்கள். இடிந்த கால்வாயை சீர்படுத்தி கழிவு நீர்  ஆற்றில் கலப்பதை உடனடியாக தடுக்க வேண்டும். கடும் துர்நாற்றம், மாசு மற்றும் பல  நோய்களுக்கு தீர்வு காணவும் பாதித்துள்ள  ஆழ் துளை கிணறுகளை சீர்படுத்தவும், உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அம்பேத்கர் நகர், காவேரிப்பட்டின மக்கள் சங்கம், குடியிருப்போர் நல சங்கம் மற்றும்  சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், வருவாய் அலுவலரிடமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளா நிலை நீடிக்கிறது. மாவட்ட ஆட்சியர் உடன்  நடவடிக்கை எடுக்க வேண்டும் இனியும் தாமதித்தால் போராட்டம் நடத்தப்படும் என  மார்க்சிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி வட்டக் குழு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.