tamilnadu

img

கொரோனா வைரஸ் தாக்கம்.... ஏப்.15 வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான விசாக்கள் ரத்து

புதுதில்லி:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான விசாக்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை மத்திய அரசால் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள்எண்ணிக்கை 73 பேராக  அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை  அறிவித்துள்ளது. இதில் இந்தியர்கள்  56 பேர், வெளிநாட்டினர்  17 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான விசாக்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி  வரை மத்திய அரசால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெள்ளி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவுவதை  கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தில்லியில்  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தலைமைல் மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதையடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தூதரக ரீதியிலான விசா ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்பு அதிகாரிகளுக்கான விசா, வேலைவாய்ப்பு விசா தவிர்த்து அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தாலியில் கல்வி காரணங்களுக்காக சென்றோர், அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மூலம் கொரோனா உள்ளதா என பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்றும், அதில் கொரோனா இல்லை என்பது உறுதியாகும்பட்சத்தில், விருப்பப்பட்டால் இந்தியாவிற்கு வரலாம் என்றும் அவ்வாறு வருவோருக்கு கொரோனா இல்லையென்றாலும் 14 நாள்களுக்கு கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;