tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து... -

https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury

இந்தியப் பொருளாதாரம் தரை தட்டி நிற்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து மைனஸ் 5 சதவீதம் என்ற நிலைக்கு தாழ்ந்திருக்கிறது. ஆனால் மோடி அரசு இதை ஒப்புக்கொள்ளும் மனநிலையிலேயே இல்லை. முற்றிலும் பேரழிவைத் தருகிற கொள்கைகள்; எவ்விதத் திறனும் இல்லாத நிர்வாகம் - இவை கூட்டுச் சேர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்து வருகின்றன. தொற்றுநோய் பெரும் ஆபத்தாக பரவி வருகிற இந்தக் காலக்கட்டத்தில் இது இன்னும் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தருணத்தில்தான் அரசு உடனடியாக மக்கள் கைகளில் பணமும், உணவும் கொடுக்க வேண்டும். மக்களின் வாழ்வை பாதுகாக்க அது மட்டுமே நம் முன்னால் இருக்கிற ஒரே வழி. மக்கள் கைகளில் பணம் சென்று சேர்ந்தால்தான் அவர்கள் அதைச் செலவிடுவார்கள்; உள்நாட்டில் உற்பத்திப் பொருள்களுக்கு அதன் மூலம் கிராக்கி அதிகரிக்கும்; அதன்மூலமே மீண்டும் பொருளாதாரம் உயிர் பெறும். இதுதான் வழி மோடி அரசே, உங்களுக்கு வேறு வழியில்லை.

;