tamilnadu

img

இந்தியாவின் பெண்பால் மக்கள் தொகை 2036 க்குள் அதிகரிக்கும் : தேசிய மக்கள் தொகை ஆணையம்

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மக்கள் தொகை ஆணையம்  “இந்தியாவிற்கும் மாநிலங்களுக்கும் மக்கள்தொகை கணிப்புகள் 2011- 2036” என்ற தலைப்பில் மக்கள் தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை 2020 இல் சமர்ப்பித்தது.

இதன் படி 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, மொத்த மக்கள்தொகையின் இந்தியாவின் பெண் பாலின விகிதம் (1000 ஆண்களுக்கு பெண்கள்) 2036 ஆம் ஆண்டிற்க்குள் அதிகரிக்கும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

1000 ஆண்களுக்கு பெண்களின் மொத்த மக்கள் தொகை 2011 இல் 943 ஆக இருந்து 2036 ஆம் ஆண்டில் 957 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தவிர பதினெட்டு மாநிலங்களில் 2036 ஆம் ஆண்டில் பாலின விகிதம் 2011 உடன் ஒப்பிடும்போது அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது.  மேலும், 2036 ஆம் ஆண்டில் டெல்லியின் என்.சி.டி.யில் 899 என்ற மிகக் குறைந்த பாலின விகிதம் எதிர்பார்க்கப்படுகிறது, குஜராத் மற்றும் ஹரியானாவில் முறையே 900 மற்றும் 908 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.