tamilnadu

img

அசாம் துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கவுகாத்தி,டிச.15- மக்களை பிளவுபடுத்தும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அசாம், மேகாலயா,திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களும் மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அசாம் மாநிலத்தில் போராட்ட க்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தனி யார் தொலைக்காட்சி நிலையத் திற்குள்ளும் புகுந்து தாக்கினர். அசாம் தலைநகர் கவுகாத்தி மட்டுமின்றி லகீம்பூர், தேமாஜி, தின் சுகியா, திப்ரூகர், சடியோ, சிவ சாகர், ஜோர்கட், கோலாகாட், கம் ரூப், பெங்கைகான் ஆகிய மாவட்டங்களில்  போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அசாமில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கவுகாத்தியில்  மாணவர்கள் தலைமைச் செயலகம் உள்பட பல இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். கவுகாத்தியில் போராட்டக்காரர்கள் மீது போலீ சார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இருவர்  ஞாயிறன்று உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.