புதுதில்லி,மே 29-மதுரை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள், புதிதாகக் கட்டப்பட்ட கரூர் மருத்துவக்கல்லூரிக்கான இடங்கள் என்று கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரி களில் 2,900 இடங்கள், ஐஆர்டி பெருந்துறை மருத்து வக் கல்லூரியில் 100 இடங் கள் என மொத்தம் 3 ஆயிரம்எம்பிபிஎஸ் இடங்கள் உள் ளன. ஐஆர்டி பெருந்துறை கல்லூரிக்கான இடங்கள் அரசின் கலந்தாய்வு மூலம்தனியாக நிரப்பப்பட வுள்ளது.தமிழகத்தில் கூடுத லாக எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தமிழக அரசு விண்ணப்பித் திருந்தது. கடந்த ஆண்டு தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்த பரிந்துரையின் பேரில் இதற்கு அனுமதி கேட்டிருந்தது. தற்போது இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது இதனால் மதுரை, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக தலா 100 இடங்கள், புதிதாகக்கட்டப்பட்ட கரூர் மருத்துவக் கல்லூரிக்கான 150 இடங்கள் என்று 350 கூடுதல்எம்பிபிஎஸ் இடங்கள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. வரும் ஜூன் முதல் வாரத்தில் நீட் தேர்வு முடிவுவெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கடுத்த நாள் முதல் எம்பிபிஎஸ் சேர்க்கை தொடங்கும் என்று கூறப்படு கிறது. எனவே, இந்த கல்வி யாண்டிலேயே கூடுதலாகப் பெறப்பட்ட 350 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.