tamilnadu

img

ஜேஇஇ மெயின் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் உட்பட 5 பேர் கைது....

கவுகாத்தி:
ஜேஇஇ மெயின் தேர்வில் ஆள்மாறாட்டம்செய்த விவகாரத்தில் அசாமில் மாணவர், அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற  ஜேஇஇ மெயின் தேர்வை 6.35 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் செப்டம்பர்11 நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்பெற்றிருந்தனர்.ஜேஇஇ மெயின் தேர்வில் முதல் 2.45 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுதத் தகுதிபெற்றவர்கள் ஆவர். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடிக்களில் மாணவர்கள்பொறியியல் படிப்புகளைப் படிக்க முடியும்.

இந்நிலையில், அசாமில் ஆள்மாறாட்டம் செய்து ஜேஇஇ மெயின் தேர்வில் 99.8 சதவீத மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படும் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மித்ரதேவ் சர்மா என்பவர்  காவல்துறையிடம் அளித்த புகாரில்  கவுகாத்திதேர்வு மையத்தில் சம்பந்தப்பட்ட தேர்வருக்குப் பதிலாக செப்டம்பர் 5 அன்றுவேறொரு மாணவர் வந்து தேர்வெழுதிய தாகக் கூறப்பட்டுள்ளது. இதற்குத் தேர்வு மையத்தில் உள்ள அதிகாரியும் உடந்தை யாக இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாகக் காவல்துறை, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. விசாரணையில் தேர்வரின் தந்தையும் (மருத்துவர்) 3 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வர், தான் செய்த மோசடியை நண்பர் ஒருவரிடம் போனில் பகிர்ந்துள்ளஆடியோ கிடைத்துள்ளது.இந்த மோசடியில் கவுகாத்தியில் உள்ள தனியார் பயிற்சி மையத்துக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.