tamilnadu

img

விவசாயிகள் வருமானத்தை எவ்வாறு இரட்டிப்பு ஆக்குவீர்கள்..?

புதுதில்லி:
“2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவேன்” பிரதமர் மோடி கூறுவது பற்றி,இந்தியா விளக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம், பிடியை இறுக்கியுள்ளது.
இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்துள்ள பிரதமர் மோடி, விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், குறிப்பாக, ‘விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும்’ என்றுகூறியுள்ளார். 

இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பான டபிள்யூ.டி.ஓ (WTO)-வின்கூட்டத்தில், எதன் அடிப்படையில் மோடி இந்த வாக்குறுதியை அளித்திருக்கிறார்? அவர் சொல்வது சாத்தியமானதுதானா? என்று ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக இருக்கும் நாடுகள், அமைப்பின் விதிமுறைகளை புறந்தள்ளும் வகையில் நடந்து கொண்டால், கேள்விகள் எழுப்பப்படுவது வழக்கம். அந்த வகையிலேயே இந்த கேள்வியை ஐரோப்பியஒன்றியம் எழுப்பியுள்ளது.“பிரதமர் மோடி விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக சுமார் 25 டிரில்லியன் ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றும் கூறுகிறார். இது எவ்வாறு சாத்தியமாகும்.. இந்தியா இது குறித்து தங்களுக்கு விளக்க வேண்டும்” என்று வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

;