tamilnadu

img

ஹசாரேவின் போராட்டம் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்தான்... தாமதமாக புரிந்து கொண்டார் பிரசாந்த் பூஷன்

புதுதில்லி:
அன்னா ஹசாரேவும் கெஜ்ரிவாலும் நடத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டம் இந்துத் துவா நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதிதான் என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், 7 ஆண்டுதாமதத்திற்கு பிறகு கண்டுபிடித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத் தில், அன்னா ஹசாரே மற்றும்அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம், ஆர்எஸ்எஸ்மற்றும் பாஜக-வால் ஆதரவளித்து, ஊக்குவிக்கப்பட்டதாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.“தில்லி முதல்வராக இருப்பவரும், அன்று ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் இயல்பை நான்அறிந்துகொள்ள தவறிவிட் டோன். நான் வாழ்க்கையில் செய்த பெரிய தவறுகள் இவை” என்று ரசாந்த் பூஷண் தன்னைத்தானே நொந்து கொண் டுள்ளார்.“அன்னா ஹசாரே தலைமையில் நடைபெற்ற ஊழல்எதிர்ப்பியக்கத்திற்கு ஆர்எஸ்எஸ் பின்புலமாக இருக்கிறதோ என்ற லேசான ஒரு சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிச்சயமாக அதைப் பற்றி தெரிந்திருக்கும்.

அந்தப் போராட்டமானது, காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலிருந்து இறக்கி, தாங்கள் பதவியில் அமர்வதற்காக, ஆர்எஸ்எஸ்மற்றும் பாஜகவால் பயன் படுத்திக் கொள்ளப்பட்டது.அரவிந்த் கெஜ்ரிவாலைப் பற்றியும், அவரின் நேர்மையின்மை குறித்தும் மிகவும் தாமதமாகவே தெரியவந்தது. ஆனால், அதற்குள் அவர் பெரிதாக வளர்ந்துவிட்டார்.”இவ்வாறு பிரசாந்த் பூஷண்கூறியுள்ளார்.

;