tamilnadu

img

ஹத்ராஸ் சம்பவம்... சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண்ணை உயர்சாதி இளைஞர்கள் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.இதனையடுத்தே இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில பாஜக அரசு பரிந்துரைத்தது.இந்நிலையில், சம்பவம் நடந்த ஹத்ராஸ்நகரின் வயல்வெளி பகுதிக்கு அக்டோபர்13 செவ்வாயன்று சிபிஐ அதிகாரிகள் நேரில்சென்றனர்.  உள்ளூர் போலீசாரும் பாது காப்புக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இளம்பெண்ணின் சகோதரரும் சம்பவ பகுதிக்கு அழைத்து வரப்பட்டார்.உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தைக்கு சிகிச்சை அளிக்க ஹத்ராஸ் நகர மருத்துவக்குழு அனுப்பி வைக்கப்பட்டது. இளம்பெண்ணின் தாயார் பரிசோதனைக்காக தனது குடும்பஉறுப்பினர்கள் இருவருடன் மருத்துவ மனைக்குச் சென்றார்.