tamilnadu

img

ரூ.1 லட்சம் கோடியை கடந்தது ஜி.எஸ்.டி. வருவாய்...

புதுதில்லி
இந்தியாவில் ஜி.எஸ்.டி. வருவாய் அக்டோபர் மாதத்தில் ரூ.1.05 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை மத்திய அரசு தராமல் வஞ்சித்து வருகிறது என்று அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் அதன் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலையின்றி வருமானமின்றி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் பாதிப்படைந்தது.  நடப்பு ஆண்டில் ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் முறையே -14 சதவீதம், -8 சதவீதம் மற்றும் 5 சதவீதம்  என்ற அளவில் வரி வருவாய் சரிவை சந்தித்திருந்தது.

\இந்நிலையில் நடப்பு ஆண்டு அக்டோபரில் முதன்முறையாக ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.  இதன்படி, ஜி.எஸ்.டி. மொத்த வருவாய் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 155 கோடியாக அதிகரித்துள்ளது. இவற்றில் சி.ஜி.எஸ்.டி. ரூ.19,193 கோடியாகவும், எஸ்.ஜி.எஸ்.டி. ரூ.25,411 கோடியாகவும், ஐ.ஜி.எஸ்.டி. ரூ.52,540 கோடியாகவும் உள்ளது.  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த ஜி.எஸ்.டி. வருவாயை விட இந்த ஆண்டு அக்டோபரில் 10 சதவீதம் வருவாய் அதிகரித்துள்ளது.