tamilnadu

img

கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்கு

குவாலியர்,நவ.17-  மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி துண்டு பிரசுரம்  விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது மத்தியப் பிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள னர். மத்தியப்பிரதேச மாநிலம்  குவாலியர் நகரத்தில் உள்ள இந்து மகாசபா ஆர் வலர்கள், மகாத்மா காந்தி யை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை பல ஆண்டு களாக வணங்கி வருகின்ற னர். இந்நிலையில் கோட்சே வின் ‘70 வது தியாக நாள்’ என்ற பெயரில் அவரது செயற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி நடத்தினர். இதில் மகாத்மா காந்தியை இழிவு படுத்தும் துண்டு பிரசுரங்  களை விநியோகித்துள்ளனர்.  இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரவீந்திர சௌஹான் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) . துண்டு பிரசுரங்களை விநி யோகித்த நபர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர்.