கோழிக்கோடு, ஜூலை 26- நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக 48 பிரமுகர்களுடன் இணைந்து பிரதமருக்குக் கடிதம் அனுப்பிய திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு எதிராக பிஜேபி விஷம் கக்கியுள்ளனர்.. “ஜெய் ஸ்ரீராம் எனக் கோஷமிடு வதைச் சகிக்க முடியவில்லை யென்றால் அடூர் கோபால கிருஷ்ணன் சந்திரனுக்குப் போவதே நல்லது என்று பிஜேபி மாநிலப் பிரமுகர் பி.கோபாலகிருஷ்ணன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். இவரது முகநூல் குறிப்பு வருமாறு: “கிருஷ்ணனும் ராமனும் ஒன்று தான். ஒரே அர்த்தம் கொண்ட பெயர்கள்தான். இது ராமாயண மாதம். இந்தியாவிலும் மற்ற நாடு களிலும் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் எழும். எப்போதும் எழும். இதைக் கேட்கப் பிடிக்கவில்லையென்றால் ஸ்ரீஹரிகோட்டாவில் பெயர் பதிவுசெய்து சந்திரனுக்குப் போகலாம். இந்தியாவில் ஜெய் ஸ்ரீராம் கோஷம் போடுவதற்குத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.இனியும் நாங்கள் அவ்வாறு கோஷம் போடுவோம். தேவைப்பட்டால் அடூர் கோபாலகிருஷ்ணனின் வீட்டுக்கு முன்னாலும் கோஷம் போடுவோம். இது ஜனநாயக உரிமை. இந்தியாவில் கோஷம் போடவில்லையென்றால் பிறகு வேறு எங்கு போய் கோஷம் போடுவது.”
டிக்கெட் எடுத்துத் தந்தால் சந்திர னுக்குப் போகத் தயார் என்று அடூர் கோபாலகிருஷ்ணன் பிஜேபி தலைவர் பி. கோபாலகிருஷ்ண னுக்குப் பதிலளித்திருக்கிறார். இவ்வளவு காலமும் பாகிஸ்தானு க்குத்தான் ஆளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட அங்கே நிறைந்துவிட்டதால் சந்திரனுக்குப் போகவேண்டுமென்று கூறுகிறார்கள் போலும் என்று அடூர் கோபாலகிருஷ்ணன் நையாண்டி செய்துள்ளார். ஜெய் ஸ்ரீராம் கோஷம் போடு வதை அல்ல, அதைக் கொலைக் கோஷமாக மாற்றுவதையே நான் உள்ளிட்ட பலரும் எதிர்க்கிறோம். சிறுபான்மையினராகிய தலித்து களை பசுக் கடத்தல் குற்றம்சாட்டித் தாக்கும்போதும், அவர்களைக் கொல்லும்போதும் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போடுவது ஸ்ரீராமனை அவமதிப்பதாகும். நான் ஒரு கடவுள் நம்பிக்கையாளன். ஸ்ரீராமனின் பெயரைக் கொலை கோஷமாக்கு வது பக்தர்களுக்குச் சகிக்கவில்லை. என் வீட்டுக்கு முன்னால் வந்து ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதில் சந்தோஷம்தான்.
பெரும்பான்மை சிறுபான்மை யை அவமதிப்பதும் தாக்குவதும் கொல்லுவதும் ஜனநாயக நாட்டுக்குச் சரியல்ல. பிரதமருக்குக் கலாச்சார ஊழியர்கள் கடிதம் எழுதியது, நாட்டில் மதத்தின் பேரால் கும்பல்சேர்ந்து செய்கிற கொலைபாதகங்கள் மீது நடவ டிக்கையெடுக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் அது சமூகக் கலவரங்களுக்கு இட்டுச்செல்லும் என்றும் சுட்டிக்காட்டத்தான். விருதுகளுக்காகத்தான் இத்தகைய நிலைபாட்டை நான் எடுப்பதாகக் கூறுவோர்க்கு ஒன்று சொல்லுகிறேன்: எனக்கு இனி இந்த நாட்டில் வேறு விருதுகள் எதுவும் கிடைப்பதற்குப் பாக்கி யில்லை என்பதை அறியுங்கள். ஒரு திரைப்பட ஊழியன் என்கிற நிலை யில் மிக உயர்ந்த வெகுமதிவரை எனக்குக் கிடைத்துள்ளது. இவ்வாறு அடூர் கோபால கிருஷ்ணன் கூறினார்.
செய்தி: மாத்ருபூமி மலையாள நாளிதழ் (26.7.2019)