tamilnadu

img

கும்பல் படுகொலைகள் இந்து மதத்துக்கு எதிரான சதியாம்!

புதுதில்லி:
மாடுகளை சந்தைக்கு விற்பதற்குகொண்டு சென்றால் கூட, இறைச்சிக்காகவே மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாக கூறியும், இஸ்லாமியர்களாக இருந்தாலும் ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல வேண்டும் என்று மிரட்டியும் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மோடி இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வந்தபின், இந்த கும்பல் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.சில நாட்களுக்கு முன்பு, ஜார்க்கண்ட் மாநில பாஜக அமைச்சர் சி.பி. சிங்,  அம்மாநில முஸ்லிம் எம்எல்ஏ இர்பான் அன்சாரியிடமே, ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என மிரட்டியது நடந்தது.ஆனால், நாட்டில் நடைபெறும் கும்பல்தாக்குதல்கள் இந்து மதத்திற்கு எதிரான சதி என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத், புதிய கதை ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளார்.
உத்தர்கண்ட் மாநிலம் பிருந்தாவனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதுதொடர்பாக கூப்பாடு போட்டுள்ள மோகன்பகவத், “இந்து மதத்தின் மீதும், நமது கலாச்சாரத்தின் மீதும் அவதூறு பரப்பும் நோக்கில் நாடு முழுவதும் ஒரு சதி நடக்கிறது; பசு மாடுகளின் பெயரில் சமூகத்தில் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் வகையில் சில சமூக விரோதிகள் கும்பல் படுகொலைகளில் ஈடுபடுகின்றனர்; சில மாநிலங்களில் திட்டமிடப்பட்டு மதமாற்றமும் நிகழ்கிறது; நாட்டில் இன்றையச் சூழல் குறித்து சங்க உறுப்பினர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்; கும்பல் படுகொலைகளால் இந்துக்கள் தவறான வழியில் திசை திருப்பப்படுகின்றனர்; இது இந்துக்களுக்கு எதிரான சதிச்செயல்” என்று கூறியுள்ளார்.

;