tamilnadu

img

அசாம் முன்னாள் முதல்வர் தருண்கோகாய்க்கு கொரோனா தொற்று…

கவுஹாத்தி
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கொரோனா பரவல் கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது. அதாவது தினசரி பாதிப்பு ஏற்றம், இறக்கத்தில் இருப்பதால் அம்மாநில மக்கள் ஒருவித அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.அங்கு இதுவரை 94,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 260 பேர் பலியாகிய நிலையில், 74,814 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தருண்கோகாய்க்கு (85) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை அவர் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

;