tamilnadu

img

அசாமில் வெள்ளம் மக்களின் வாழ்வைச் சூறையாடியிருக்கிறது மத்திய மாநில அரசுகளோ மக்களுக்கு எவ்வித நிவாரணம் அளிக்கவில்லை...

புதுதில்லி:
அசாமில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதன் காரணமாக 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரங்களுக்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், இதுவரை 84 பேரி உயிரிழந்துள்ளபோதிலும் மத்திய அரசோ, அசாம் மாநில அரசோ மக்களுக்கு நிவாரணைம் அளித்திட எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காதிருப்ப தற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அசாமில் மும்முறை ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 84 பேர் ஏற்கனவே உயிரிழந்திருக்கின்றனர். பிரம்மபுத்திரா, பாரக் மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதன் காரணமாக, மண் அரிப்பு ஏற்பட்டு 24 மாவட்டங்களில் உள்ளமூவாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. வெள்ளத்தால் பயிரிடப்பட்டிருந்த 1.27 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விளைந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளதுடன், கால்நடைகளும் கணக்கிடமுடியாத அளவிற்கு இறந்துள்ளன. ஆயிரக்கணக்கான பாலங்கள், ஆற்றின் கரையோரங்கள், வீடுகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருந்த போதிலும் பாஜக தலைமையிலான அசாம் மாநில அரசு, இத்தனை ஆண்டு காலமும் ஆற்றின் கரையோரங்களை சரிசெய்யாததன் காரணமாக, அவை இந்த வெள்ளப்பெருக்கில் கடுமையாக சேதம் அடைந்துவிட்டன.

பல இடங்களுக்கு நிவாரண உதவிகள் போய்ச் சேரவில்லை.இதுவரையிலும் மத்திய பாஜக அரசும் எவ்விதமான நிவாரணத் தொகுப்பும் அறிவிக்கவில்லை, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மதிப்பீடு செய்வதற்கு மத்தியக் குழு எதையும் அனுப்பவும் இல்லை.அசாம் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் போதியஅளவுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கு உத்தரவாதம் செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. அசாமில் தொடர் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தேசியப் பிரச்சனையாக அங்கீகரித்து, போதிய நிதி விடுவித்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)

;