tamilnadu

img

தெலங்கானா நீர் மின் நிலையத்தில் தீ விபத்து - 6 பேர் பலி

தெலங்கானாவில் நீர் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தெலுங்கானா மாநிலம்   நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணையில்  பூமிக்கடியில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையத்தில் நேற்றிரவு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து  தீ விபத்தும் ஏற்பட்டு உள்ளது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.