tamilnadu

img

‘கிரிக்கெட் விளையாட்டிலும் கூட அரசியல் செய்வது அபாயமானது?’

புதுதில்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியை இந்திய ணி வீழ்த்தியது. இந்த வெற்றியைஇந்திய ரசிகர்கள் கொண்டாடினாலும், அடிப்படையில் இது ஒரு விளையாட்டு புரிதலும் நீண்டகாலமாகவே அவர்களுக்கு உள்ளது. அது பல சமயங்களில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, பாகிஸ்தான் மீதான மற்றொரு ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்று,விளையாட்டை அரசியலாக்கி பேசியிருப்பது, பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.இந்நிலையில், அமித்ஷாவின் கருத்துமிக ஆபத்தானது என்று ‘பிரண்ட் லைன்’ ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் விஜயசங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக தமது முகநூல் பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: 

‘பாகிஸ்தான் மீது மற்றுமொரு தாக்குதல். அதே விளைவு’ என்று குதூகலப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்தியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. வெற்றியைக் கொண்டாடுவதில் பிரச்சனை இல்லை. அதை அரசியலாகப் பார்த்து ‘தேசபக்தியை’ வளர்ப்பதுதான் அபாயம். அப்படிப் பார்த்தால் அபத்தமான டிவுகளுக்குத்தான் வரவேண்டியிருக்கும். ஏனெனில், இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே நடந்திருக்கும் 59 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 12 போட்டிகளிலும் இந்தியா 9 போட்டிகளிலும் வென்றிருக்கின்றன. 131 ஒருநாள் போட்டிகளில் 74-இல் பாகிஸ்தானும், 56-இல் இந்தியாவும் வென்றிருக் கின்றன. இதில் விசேஷம் என்னவென்றால் கிரிக்கெட் வீரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பாகிஸ்தானுடனான ஆட்டத்தை, வழக்கமான மற்றொரு போட்டியாகத்தான் பார்த்திருக்கிறார்கள். ஆட்ட களத்திற்குள் செல்லும் முன்அணி சகாக்களிடம் என்ன சொல்வீர்கள்என்று தோனியைக் கேட்ட போது அவர் ன்னது ‘ழுரலள, நதேடில வாந பயஅந’.  அதாவது விளையாட்டை அனுபவியுங்கள் என்பதுதான்.இவ்வாறு விஜய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.